MANNIPAAYA
கண்களில் தெங்கும் கண்ணீராகா நீ நின்றாய்
இதழ் ஓரத்தில் மலர்கிற புன்னகையாவும் நீ நின்றாய்
என்னை மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா...
என் நிலாவே என் கதிரே
என் மழையே என் முகிலே
என் மனதில் ஓடும் நதியே
என்னை மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா...
உன் கண்கள் சிவக்கும் கோவத்திலே
அதில் தீயாய் நானும் எரிகிறேன்
நீர் போலெ மெல்லிய மனதினிலே
ஒரு வெறுப்பாய் நானும் மூழ்கினேன்
பெரும் தவறுகள் எளிதாய் செய்துவிட்டு
ஒரு பிணமாய் நானும் நிற்கின்றேன்
தேகம் கொண்ட தேவதையே
என் உயிராக நீ இருப்பாயா...
ரேகைகள் இலா மின்மினியே
என் வாழ்வில் வெளிச்சம் தருவாயா...
என்னை நீயும் மன்னிப்பாயா......
என்னை முழு மனதோடு ஏற்பாயா...
Comments
Post a Comment